#BREAKING : சென்னையில் அதிகபட்சமாக 23 ச்.மீ மழை பதிவு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  நுங்கம்பாக்கம், அம்பத்தூரில் தலா 21 செ.மீ மழையும், அயனாவரத்தில் 18 செ.மீ மழையும், எம்.ஜி.ஆர் நகரில் 17 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் – 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.