#BREAKING : ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…!

ஆட்சியர் மலர்விழி வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை.

ஆட்சியர் மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அக்காளை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.