#Breaking: கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் பலி.!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் இன்று காலை உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது 3 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி(60)  என்பவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.