எல்லையில் ஊடுருவல்… ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் உள்ள காலா வனப்பகுதிக்குள், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக நேற்று ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பேரா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி)-யுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கையெறி குண்டு முதலியவற்றை பறிமுதல் செய்ததாக அனந்த்நாக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.