சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்த கஜோல்.!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள அவர், நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, நேற்று தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவர் பகிர்ந்தவுடன், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

ஒரு ரசிகர் எழுதினார், “ஏய் கஜோல் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் குழந்தை, உங்களுக்கு மிகவும் அன்பையும் அரவணைப்பையும் அனுப்புகிறேன். மற்றொரு ரசிகர், “டேக் யுர் டைம் குயின், நீங்கள் அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிறைய அன்பையும் அரவணைப்புகளையும் அனுப்புகிறோம். உனக்காக நாங்கள் எப்போதும் இருப்போம் நாங்கள் உன்னை நேசிக்கிறோம் ராணி என்று குறிப்பிட்டுள்ளனர்.

சில பயனர்கள் அவர் தனது வரவிருக்கும் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர். அந்த வகையில், ஒரு ரசிகர், இது அவரது அடுத்த OTT தொடரான தி குட் வைஃப்க்கான விளம்பரம் என்று கூறியுள்ளார்.