மோசமான செயல்…தொடர்ந்து ஹிந்தியில் பேசுறாங்க..செம கடுப்பான சித்தார்த்.!

பிரபல நடிகர் சித்தார்த் நேற்று தந்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ” நேற்று நானும் என்னுடைய பெற்றோர்களும் மதுரை விமான நிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம்.

அங்கிருந்த ‘CRPF’  அதிகாரிகள் என்னுடைய பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன். அவர்கள் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசினார்கள்.

இதையும் படியுங்களேன்-

Siddharth
Siddharth [Image Source : Twitter]

அவர்கள் செய்தது மிகவும் மோசமான ஒரு செயல் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியில் பேசியதால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்று கூறினார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்” என்று நடிகர் சித்தார்த் மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

Siddharth
Siddharth [Image Source : Twitter]

மேலும் நடிகர் சித்தார்த் தற்போது தமிழில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment