ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்து இருக்கிறார்.
நடிகை அமலா பால் தமிழில் கடைசியாக நடித்த ‘கடாவர்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இப்பொழுது, ஒரு சிறிய விடுமுறைக்காக கோவா சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இப்பொது, இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
தற்போது, கோவா கடற்கரையில் இருக்கும் அமலாபால் அங்கிருக்கும் திறந்தவெளி பார் ஒன்றில், பிகினி உடையில் பீர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அண்மைய காலமாக கோவாவுக்கு டூர் சென்று வரும், நடிகை அமலா பால் அங்கே தங்கிவிட்டாரா என்னவோ தெரியவில்லை. அடிக்கடி கோவா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.