ஆகஸ்ட் 4ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது.

இதற்காக, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, விழா மலர்க் குழு, கூட்ட அரங்கு அமைப்புக் குழு, விளம்பரம், செய்தித் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்புக் குழு என 9 குழுக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். இந்த நிலையில், மாநாடு தொடர்பாக ஆகஸ்ட் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.