மீண்டும் இரு அவைகள் 2 மணிவரை ஒத்திவைப்பு; ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்.!

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணிக்கு தொடங்கிய நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிய நிலையில் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி 12 மணிக்கு அவைக்கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே முழக்கங்களை அதாவது, பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என எழுப்பினர். இதனால் மீண்டும் இன்று இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய தொடர் முழக்கம் இதனால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கிற்கு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்  உத்தரவிட்டுள்ளார்.