தமிழ்நாடு

முக்கிய துறைகளில் முதலிடத்தில் தமிழ்நாடு.! வெளியான ஐஐஎம் சர்வே ரிப்போர்ட்….

PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை :

மக்கள் தொகை அளவில் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ளது. மகாராஷ்டிராவில் 13.28 கோடி மக்கள் தொகையும், குஜராத்தில் 6 கோடி மக்கள் தொகையும் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி வருவாய் :

மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு முக்கிய வருவாயாக இருப்பது மாநிலத்தில் தொழிற்சாலை, தொழில்முனைவோர் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருவாய் ஆகும். இந்த வரி வருவாயில், இந்தியாவின் மான்செஸ்டர் மும்பையை கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் ரூ.4,51,800 கோடி வரி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. 2வதாக தமிழ்நாடு ரூ.3,14,800 கோடி வரி வருவாய் ஈட்டுகிறது என்றும், அடுத்து குஜராத் ரூ.1,79,600 கோடி வரி வருவாய் ஈட்டுவதாகவும் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வளர்ச்சி குறியீடு :

சமூக வளர்ச்சி குறியீடு என்பது ஒரு மாநிலம் தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வுக்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அளவீடு ஆகும். அதன் அடிப்படையில் 65.34 சதவீதம் கொண்டு முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 57.88 சதவீதம் கொண்டு இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அதேபோல் 3வது இடத்தில் குஜராத் 56.65 சதவீதத்தை கொண்டுள்ளது.

தொழிற்சாலைகள் :

தொழிற்சாலை எண்ணிக்கையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 36,000 தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 28000 தொழிற்சாலைகள் உள்ளன. 3வது இடத்தில் 22000 தொழிற்சாலைகளுடன் குஜராத் மாநிலம் உள்ளது.

நகரமயம் :

மக்கள் தொகைக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை கொண்டு நகரமயமாகும் அளவீடு, தமிழ்நாடு 46.5% கொண்டு முதல் இடத்தையும், மகாராஷ்டிரா 45.2% கொண்டு இரண்டாவது இடத்திலும், குஜராத் 42.5% கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மனித வளர்ச்சி குறியீடு :

இது மனித ஒழுக்கம், கற்றல், அறிவு சார்ந்து அறவிடப்படும் குறியீடு ஆகும். இந்த அளவீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மகாராஷ்டிரா, 3வது இடத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

6 hours ago