இன்று புதுச்சேரியில் தளர்வில்லா ஊரடங்கு அமல்..!

இன்று புதுச்சேரியில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.தளர்வுகள் இல்லாத இந்த முழு ஊரடங்கு கடந்த வாரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி வரையிலும் முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.