பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.! 500 ரூபாய் அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் 500 ரூபாய் அபராதம் என்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

2021இல் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியின் போது பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் பெயரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மேலும், பெண் எஸ்பியை புகார் அளிக்காமல் தடுத்தாததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டு இருந்ததால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.