3ஆம் வகுப்பு படித்து வரும் ஜெய்ஸ்ரீவர்மன் எனும் சிறுவன், தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நிதியுதவியாக கொடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்து. பலவேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போன்றோர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவனின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக மணிவண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெய்ஸ்ரீவர்மன் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனிடம் தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை கூறியுள்ளார்.
இதனை கேட்டறிந்த அச்சிறுவன் தான் சைக்கிள் வாங்க சேர்த்து வரித்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என தீர்மானித்து தனது தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து, அவரது தந்தை மணிவண்ணன், சிறுவன் ஜெய்ஸ்ரீவர்மனை பேரூராட்சி அலுவலகத்திற்கு கூட்டி சென்று சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் நிதியை செயல் அலுவலர் குகனிடம் வழங்கியுள்ளார். அவர் அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்க இந்த நிதி பயன்படும் என உறுதியளித்தார்.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…