பிரதமர் வருகை.. தலைமைச்செயலகத்தில் ஆலோசனை..!

கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த  கேலோ இந்திய விளையாட்டு போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

இதையடுத்து ஜனவரி 20ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் பிரதமர் மோடி நாளை மறுநாள் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் வருகை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் , உயர்காவல்அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.