பேனிக் பட்டனை அழுத்தியும் யாரும் உதவவில்லை-டெல்லியில் தாக்கப்பட்ட பெண் உபெர் டிரைவர்

பேனிக் பட்டனை அழுத்தியும் எந்த பலனும் இல்லை என்று, டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் உபெர் டிரைவர் கூறியுள்ளார்.

டெல்லியில், பிரியங்கா தேவி என்ற 30 வயது பெண் ஓட்டுநர் உபெரில் கார் ஓட்டி வருகிறார், இவர் காஷ்மீர் கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, இரண்டு கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது, பிரியங்கா தேவி, காரில் உள்ள அவசர கால உதவி(பேனிக்) பட்டனை, தான் அழுத்தியும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

டெல்லியின் சமய்பூர் பட்லியை சேர்ந்த பிரியங்கா, தான் பாதிக்கப்படும் போது அவர்களிடம் கார் எனக்கு சொந்தமானது அல்ல என்று கூறியும், அந்த கொள்ளையர்கள் என்னை தாக்கினர், நான் சத்தமாக கத்த ஆரம்பித்தபோது, அவர்களில் ஒருவர் என்னை பீர் பாட்டிலால் தாக்கினார். என் கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இருவரும் தனது காருடன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரியங்கா கூறினார். இந்த சம்பவத்தின்போது நான் பேனிக் பட்டனை அழுத்தினேன், உபெரை தொடர்பு கொண்டேன் எதுவும் எனக்கு உதவவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.

Leave a Comment