ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment