ஆகாசா ஏர் நிறுவனத்தின் தொடக்க விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டது..

பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து வீரர்களான ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே ஆகியோரின் ஆதரவுடன் ஆகாசா ஏர், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இன்று முதல் விமான சேவையை தொடன்கியது.

இந்த விமானம் மும்பையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கு அகமதாபாத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

ஆகாசா தனது விமான இயக்குநரின் சான்றிதழை ஜூலை 7 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) பெற்றது. ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 13, ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 15 முதல் பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-மும்பை மற்றும் சென்னை-மும்பை வழித்தடங்களில் ஆகாசா ஏர் சேவையைத் தொடங்கும்.

Leave a Comment