தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட்கள் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டன.! – தலைமை செயலர்!

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கையில் இன்று புதியதாக 58 பேருக்கு கொரோனா உறுதியாகி தற்போது தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 969-ஆக உள்ளது. 

இந்த தகவல்களை தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், ‘ தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும், ‘தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கிட் ஆர்டர் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட்கள் வர உள்ளன. ‘ என தெரிவித்தார். மேலும், ‘ரேபிட் கிட்டை வைத்து மட்டும் தெளிவான முடிவு அறிய முடியாது. பி.சி.ஆர் முறையும் இருந்தால் தான் தெளிவான முடிவு அறிய முடியும். தற்போது தமிழகத்தில் பி.சி.ஆர் கிட்கள் போதுமான அளவு இருக்கின்றன ‘ எனவும் தெரிவித்தார்.