குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்த இளைஞர் மின்கம்பம் உச்சியில் சிக்கிக்கொண்டார்

காந்திநகர்: குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்து மின்கம்பத்தின் உச்சியில் தஞ்சமடைந்த ஒருவர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். வடமாநிலங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பெரும் பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படையினர் மற்றும் தேசிய பேரழிவு மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பானஸ்கந்தா பகுதியில் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் மின்கம்பத்தின் உச்சியில் ஏறியுள்ளார். கீழே இறங்க முடியாமல் கம்பத்தில் தவித்த அவரை மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

Leave a Comment