பணப்பட்டுவாடா தொடர்பாக அறிக்கை கேட்ட -சத்ய பிரதா சாஹூ..!

நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவினர் வீட்டை வாடகைக்கு எடுத்து பணப்பட்டுவாடா செய்ததாகவும் அதனால் பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார் உள்ளிட்ட ஐந்து திமுகவினரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதனால் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ சரவணன் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாஹூ அறிக்கை கேட்டுள்ளார்.