Breaking:பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 39 பேர் பலி

பாகிஸ்தானின் லாஸ்பேலாவில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

மாகாணத் தலைநகர் குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு 48 பயணிகளுடன் பயணித்த பேருந்து ,“அதிவேகத்தின் காரணமாக, லாஸ்பேலா அருகே யு-டர்ன் எடுக்கும் போது ஒரு பாலத்தின் தூணில் மோதி  பள்ளத்தாக்கில் சிக்கி பின்னர் தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில் 39 பயணிகள் உயிரிழந்ததாகவும் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment