ரஷ்யா: ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகே உள்ள ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அங்குள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பெண்ணமணியை மட்டுமே மீட்டுள்ளதாகவும் மீதம் உள்ள மூவரையும் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 18-20 வயதுடைய 4 மாணவர்கள் – 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னில் என்ன காரணம் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஆற்றிலிருந்து மீட்ட அந்த பெண்ணும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மீதம் உள்ள 3 மாணவர்கள் இறந்துள்ளதாகவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியான சிகிச்சையையும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் நீரில் மூழ்கியதற்கான காரணம் அல்லது பலியானவர்களின் அடையாளம் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை”, எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையரான சந்தீப்…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலானது சென்னை செம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில…
TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று…
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும்…
வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும்,…