2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

மாமல்லபுரம் கடற்கரை சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு.

சென்னை மாமல்லபுரம் கடற்கரை சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment