12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை- ஆளுநர் ரவி ஒப்புதல்..!

அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி நீண்டகாலமாக சிறையில் உள்ள 12 கைதிகள் விடுதலை செய்ய கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்பரிந்துரை

அதன்படி கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதுபோல கோவை சிறையில் உள்ள 6 பேரும், வேலூர் மற்றும் புழலில் தலா ஒரு சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment