10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழை
பெற்றுக்கொள்ளலாம்.