100 நாள் வேலை திட்டம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என நீதிமன்றம் கருத்து.

100 நாள் வேலை திட்ட முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தென்காசி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் போலி ரசீது, புகைப்படம் தயாரித்து நிதி முறைகேடு செய்ததாக வழக்கறிஞர் மோகன் வழக்கு தொடுத்திருந்தார். நல்லூர் ஊராட்சியை மன்ற செயலாளர், அலுவலர்கள் மீது நடவட்டிக்க எடுக்க உத்தரவிட கோரி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment