மீண்டும் தாக்குதல்…உக்ரைன் மீது ஏவுகணை வீசிய ரஷ்யா..18 பேர் உயிரிழப்பு.!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனுடனான போரின் போது கடந்த வியாழன் இரவும் வெள்ளிக்கிழமையும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளது.

ரஷ்யா, உக்ரன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது குறைந்தது 18 பேர் பலியாகியதாகவும், 86 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே இரவில் தாக்கியதாக உக்ரைனின் இராணுவத் தளபதி வலேரி ஜலுஷ்னி கூறினார். பிப்ரவரி 2022ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது மிகப் பெரிய வான்வழி தாக்குதல் என்று கூறப்படுகிறது.