Maharashtra:ரயில் மேம்பால நடைமேடை ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 1 பேர் பலி, 12 பேர் காயம்

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

புனே நோக்கிச் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக ஏராளமான பயணிகள் மேம்பால நடைமேடையை  பயன்படுத்திய போது  அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்தநேரத்தில் ரயில் மேம்பால  நடைமேடையின் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது ஸ்லாப் விழுந்ததில் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Comment