டிசம்பரில் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு முடிவுகள் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-1 தேர்வு முடிவுகள் 2023 டிசம்பரில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. இதுபோன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முடிவுகளும் இந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குரூப்-1 தேர்வுக்கான எழுத்து தேர்வு நடந்த நிலையில், தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகிறது. மேலும், வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.