சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்க அமைச்சர் செய்த செயலை பாருங்கள் !

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியினரை, உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.நேற்று காலை 11 மணியளவில் மின்துறை அமைச்சர் தங்கமணி, முதலமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

திருச்செங்கோடு – ராசிபுரம் சாலையில் தென்னம்பாளையம் அருகே சென்றபோது, காரில் சென்ற தம்பதியினர் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்ட அமைச்சர், காரிலிருந்து உடனடியாக இறங்கினார். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தம்பதியினர் மற்றும் அவரது மகனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment