ஒரே நாளில் 7420 மாணவர்கள் அண்ணாபல்கலைக் கழக ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பம்!

ஒரே நாளில் 7 ஆயிரத்து 420 மாணவர்கள் ,அண்ணாபல்கலைக் கழக ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள், நேரடியாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டும் என்ற நிலையை மாற்றி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் ஆன்லைன் முறை இந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான முதல் நாளில் மாலை 6 மணி நிலவரப்படி 7 ஆயிரத்து 420 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 42 இடங்களில் பல்கலைக்கழகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள இலவச உதவி மையங்களை பயன்படுத்தி ஆயிரத்து 50 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

6 ஆயிரத்து 370 பேர் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment