இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி-ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து பேசுகிறார் .

முதல்வர் பழனிசாமி,காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு பதில் வராத நிலையில் ஆளுநரை சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தக் கோரிக்கை வைப்பார் என தெரிகிறது.

காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி தீர்ப்பு வரும் நிலையில் ஆளுநர் – முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment