இனி 2 மணி நேரத்தில் திருப்பதி கோயிலில் இலவச தரிசனம்!

2 மணி நேரத்தில்,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், சுவாமி தரிசனம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால் 2 மணி நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கும் முறை கடந்த டிசம்பர் மாதமும், கடந்த வாரமும் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அமல்படுத்தியது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் தலா  4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து பயோ மெட்ரிக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment