அம்மாக்களின் அன்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்… எம்.பி.கனிமொழி டிவிட்.!!

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களுடைய அம்மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அவருடைய தந்தை கருணாநிதி மற்றும் அம்மா ராஜாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம் அன்னையர் நாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.