விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் – ஆய்வாளர், எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்..!

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தங்கபாண்டியனிடம் விவசாயி ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் விவசாயியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவர் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது.

விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நீதிபதி தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை; எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்,  விவசாயியை ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
‘முறையான தகவல் வழங்காத பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி, தலையாரி முத்துலட்சுமி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி  எழுப்பி, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்த நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

2 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

8 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

28 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

37 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

46 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago