வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை…சவரனுக்கு ரூ.352 உயர்வு.!

தங்கம்  சென்னையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில்  உயர்ந்துள்ளது.  கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 45,520ஆக இருந்ததே அதிகபட்ச உச்சமாகும். தற்போது அந்த விலையை மிஞ்சும் அளவிற்கு தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனை. மேலும் , அதைப்போல கிராமுக்கு ரூ.44உயர்ந்து ரூ.5,720க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.20 உயர்ந்து 83-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில்  உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Leave a Comment