தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

நாளை முதல் வரும் 16-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

மேலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.