தென்காசி – 5 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் 5 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.

தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர், ஆகிய 5 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (07.07.2023) விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளம் வந்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.