#BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி.!

ஏப்ரல் 16-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 45 இடங்களில் இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலமானது நடைபெற இருக்கிறது. சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, காவல்துறையினரும் தற்போது அனுமதி அளித்துள்ளனர்.

முன்னதாக, தமிழக்த்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 பேரணிக்கு அனுமதி :

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.  இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற அமர்வு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை மொத்தமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தள்ளுபடி உத்தரவு மூலம், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment