1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு.!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது.

இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில் ” பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் – இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில்  தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு  2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் ரூ.238,92, கோடி செலவினம் ஏற்படும்.  எனவும் அரசாணையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது.

மேலும், அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு  வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.