பாளையங்கோட்டை சிறையில் வலிப்பு நோயால் விசாரணை கைதி மரணம்.!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் பாரத் முருகன் (28) இவரை ஆய்க்குடி காவல்துறையினர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சிறையில் அடைத்தனர்.  மேலும் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பாரத் முருகனிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இதையெடுத்து மேல் சிகிச்சைக்காக காலை 11 மணியளவில் நெல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு சிறிது நேரம் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். பாரத் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று மாஜிஸ்திரேட்  விசாரணை முடிந்த பிறகு பாரத் முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.