பாகிஸ்தான் தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு

பாகிஸ்தான் நாடளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அதே நேரம் இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேட்சைகள், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – (நவாஸ்) கட்சியை விட சற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் சற்றுமுன்னர் தெரிவித்திருக்கிறார். இதோடு, இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப் போகிறேன்..! எலான் மஸ்க் அறிவிப்பு

மேலும், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறிய ஷெரீப் தனது கட்சி எத்தனை இடங்களை வென்றது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. எப்படியிருப்பினும், தேர்தல் குழுவால் வெளியிடப்பட்ட சமீபத்திய எண்ணிக்கையில் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி 42 இடங்களை மட்டுமே வென்றதாக தெரிவிக்கப்பட்டது. இது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்குத் தேவையான இடங்களை விட மிகவும் குறைவானதாகும்.

Leave a Comment