மலையாள சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு வருகிறது. குறிப்பாக பிரேமலு, பிரம்மயுகம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக 50 கோடிகளை தாண்டி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அந்த ஹிட் வரிசையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் கொஞ்ச நேரத்துல திக் திக் என கூறி வருகிறார்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கொடைக்கானலுக்கு ஒரு விடுமுறைப் பயணத்தில் நண்பர்கள் குழு எதிர்பாராத சாகசங்களை எதிர்கொள்வதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை சிதம்பரம் எஸ் என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…