தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை நெருங்கியதால், வாடிக்கையாளர்கள் சற்று கவலையடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (30. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880 கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 58, 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ. 78க்கும், கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.

காந்தியின் நினைவு தினம் – திமுக அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு.!

சென்னையில் நேற்றைய தினம் (29. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 5,845 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,760 ரூபாய்க்கும் விற்பனையானது.  அதேபோல், வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்,70 காசு களுக்கும்,1 கிலோ 77,700 ரூபாய்க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment