சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக SV.கங்காபூர்வாலா பதவியேற்பு.!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக SV.கங்காப்பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சய் விஜய்குமார் கங்காப்பூர்வாலா என்ற முழுப்பெயர் கொண்ட அவர், மும்பை நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் மூத்த நீதிபதிகள், அமைச்சர்கள் உதயநிதி, ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.