சென்னையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உணவுத்திருவிழா.!

சென்னையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உணவுத்திருவிழா நடைபெற இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவுத்திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.