எடப்பாடியில் பரபரப்பு.! காவிரி ஆற்றில் வீசப்பட்ட நாட்டு வெடி.. ஒருவர் பலி.!

சேலம் மாவட்ட எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பெருமாள் என்பவர் மீன்களை பிடிப்பதற்காக நாட்டு வெடி மருந்து தோட்டாவை வீசி மீன்களை பிடித்து அங்கிருக்கும் மக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல, பெருமாள் காலையிலே  மீன் பிடிப்பதற்காக பூலாம்பட்டி காவிரி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது வெடி மருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசியப்பொது தண்ணீரில் குளித்து கொண்டிருந்த மோகன் குமார் என்பவர் வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை பார்த்த மோகன் குமாரின் உறவினர் பூபதி என்பவர் குடும்பத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடி மருந்து தோட்டாவை வீசிய பெருமாளை கைது செய்து தற்போது பூலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசியப்போது இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment