சென்னையில் விடிய விடிய மழை: விமான சேவைகள் பாதிப்பு…பயணிகள் கடும் அவதி!

இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு.

சென்னையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சியில் இருந்து புறபட்ட விமானங்கள் உட்பட மொத்தம் 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கின.

இது போக, சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.