குடி போதையில் பெற்ற மகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த தாய்!!!

குடி போதையில் பெற்ற மகளை தண்ணீர் தொட்டியில் வீசி தாய் ஒருவர் கொள்ளை செய்துள்ளார்.இந்த சம்பவம் கோத்தகிரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரியை அடுத்த எம்.கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் சஜிதா. இவருக்கு சுபாசினி, ஹர்சினி  என்ற இரு மகள்கள் உள்ளனர். எம்.கைகாட்டி பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ்ஜில் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கணவர் இல்லை கடந்த வருடம் இறந்துவிட்டார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளநிலையில் தனது மகள்களை சரியாக பராமரிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு நாள்  சஜிதா தனது  மகள் ஹர்சினியை  காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தீவிர  விசாரணை நடத்தியதில், சஜிதா ஒரு நாள்  இரவு மது அருந்திய போது  அவரது மகள் ஹர்சினியை காட்டேஜ் நீர்தொட்டியில்  துாக்கி விசி கொலை செய்துள்ளார்.

குழந்தையை காணவில்லை  என காலையில் அந்த பகுதி மக்கள்  அனைவரையும் நம்ப வைத்து உள்ளார். சஜிதா மீது தான் தவறு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சஜிதா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Comment