#CSKvsRR: ஐபிஎல் போட்டி – மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கம்.!

கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.!

கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காகநடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக, பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை: இதனை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. அதாவது, அரசினர் தோட்ட ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் புறப்படும் எனவும், போட்டி முடிந்தும், 5-15 நிமிடங்கள் இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னையில் சி.எஸ்.கே. அணி விளையாடும் நாட்களில் மட்டும், போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment